ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப்பின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் சிட்னி விமான நிலையத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவினர்களை வரவேற்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடைக்கப்பட்டது. மேலும், பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள், தங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் […]
