ஐ.நாவின் உலக உணவு அமைப்பானது, இலங்கையில் சுமார் 60 லட்சம் மக்கள் உணவு கிடைப்பதில் நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான உலக உணவு அமைப்பினுடைய இயக்குனராக இருக்கும் அப்துல் ரஹீம் சித்திக், தெரிவித்திருப்பதாவது, ஆரம்பகால ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் 63 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பற்ற […]
