சாலை தடுப்பு சுவரில் பைக் மோதிய விபத்தில் தந்தை கண் எதிரே ஆறு வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவொற்றியூரில் சரஸ்வதி நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் அர்ஜுன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். தனியார் தொழிற்சாலையில் இரவு நேரம் வேலை பார்த்து வருவதால் பகல் நேரத்தில் பகுதிநேர வேலையாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். […]
