இந்தோனேஷியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சுமார் 5 :17 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 6-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது. அந்நாட்டில் உள்ள டோபெலோ நகரத்திற்கு வடக்கு பகுதியில் ஏறக்குறைய 174.3 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உருவானது. எனினும், இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்தோனேசியாவில், நில தட்டுகளின் அசைவினால், அவ்வபோது நிலநடுக்கங்கள் உருவாகின்றன.
