பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும் நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]
