கேரளாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. […]
