தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்தவருக்கு 3ஆவது நபராக கொரோனா உறுதி செய்யப்பட்டது. […]
