ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 590 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதிலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் பலரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 38 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 450 […]
