தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வருகின்ற சைலேந்திரபாபு, ரவுடிசம் மற்றும் கட்டபஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து இரண்டு கொலைகள் நடந்தது. அதனைப் போலவே திருநெல்வேலியில் சென்றவாரம் போலீசாரின் தம்பி ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். மேலும் தேனி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் சில ரவுடிக் கும்பல்கள் பழிவாங்குவதற்காக தொடர்ந்து கொலைகளை செய்கிறார்கள். […]
