சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் பொதுமக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வருகின்ற எட்டாம் தேதி சர்வதேச செஞ்சிலுவை தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய செஞ்சிலுவை சங்கத்தினர் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் கிளை சார்பில் ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய […]
