சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை […]
