குடிமங்கலம் அருகே உள்ள ஆமந்தகடவு கிராமத்தில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட வரும் முட்டை கோழி பண்ணையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆமந்தகடவு கிராமத்தில் சுற்றிலும் ஏற்கனவே முட்டை கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளது. தற்போது புதிதாக பிஏபி கால்வாயில் முட்டை கோழி பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமன்றி ஊருக்கு அருகிலேயே இந்த கோழிப்பண்ணை […]
