அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது 500 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞான ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் […]
