கத்தி முனையில் வாலிபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று கும்பலில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள விளாத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி சாந்தமங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். அதன்பின் நடுபட்டி அய்யனார் கோவில் அருகில் வைத்து பிரபுவை 4 பேர் […]
