திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள வளைகுடா பகுதியில் ஹர்மொஸ்கன் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் […]
