தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் பாணவரம் கூட்டுரோடு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும் படி வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை […]
