5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை 21 மூட்டைகளில் பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனிப்பிரிவு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் சுரேஷ், பாலமுருகன், ராஜசேகர் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் விருதாச்சலம் பங்களா தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து […]
