ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 வாலிபர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங் செய்வது தொடர்ந்து வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் தலைகவசம் அணியாமல் பைக் ரேஸ் செய்வதால் விபத்தில் பலரும் உயிரை இழக்கும் வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு […]
