அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]
