மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில் 5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]
