உகாண்டா நாட்டில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா என்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 16ஆம் தேதியன்று தலைநகர் கம்பாலாவில் இருக்கும் பாராளுமன்ற கட்டிடத்திலும், தலைமை காவல் நிலையத்திற்கு அருகிலும் தீவிரவாதிகள், தொடந்து மூன்று தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர். இதில், நான்கு நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 33 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தற்கொலைப் படைதாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். […]
