உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளான பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் நெதர்லாந்து நாட்டில் 5-வது அலை பரவி வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் […]
