கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]
