பீகார் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் 48 சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி பல சடலங்கள் மிதந்தது. சுமார் 48 உடல்கள் மிதந்து வந்ததது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்த அதிகாரிகள் அது கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். […]
