42 லட்சம் ரூபாயை உறவினர் திருடியதாக கூறி நாடகமாடிய பெண் பேஸ்புக் நண்பரிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. சென்னை, மந்தைவெளி, பெரியபள்ளி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் இருந்த 42 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறியிருந்தார். முன்னதாக பணம் திருடு போகும் நாளில் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. […]
