பெங்களூரு நகரில் வசித்து வரும் கோபால கிருஷ்ணா அரசு ஒப்பந்ததாரர் ஆவார். அரசு பணிகளை எடுத்து செய்ததற்காக கோபால கிருஷ்ணாவுக்கு ரூபாய்.209 கோடி பில் கொடுக்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கோபாலகி ருஷ்ணாவுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வாயிலாக காமத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது “தனக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் அருணாதேவியுடன் பழக்கம் இருக்கிறது. அவர் வாயிலாக ரூபாய்.209 கோடியை பெற்று கொடுப்பதாகவும், இதற்காக ரூபாய்.25 கோடி கொடுக்க வேண்டும்” எனவும் காமத் கூறியுள்ளார். […]
