ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை […]
