இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பினுடைய தளபதி உட்பட 3 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல வருடங்களாக கடும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அல்-அக்சா பிரிகேடிஸ் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக […]
