ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனோகரன் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த […]
