காலராவுக்கு தமிழகத்தில் ஒரு நபர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தில் வசிப்பவர் கண்ணன்(60). இவருக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் […]
