மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார். இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. […]
