நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தேசிய புவியியல் ஆய்வு மையமானது, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
