சென்னையை அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் ஒரே அகழாய்வில் நான்கு நாகரிகங்களை பிரதிபலிக்கும் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தை அடுத்திருக்கும் வடக்குபட்டு கிராமத்தில் வரலாற்று மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் பல்வேறு வருடங்களாக தொடர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அகல ஆய்வு நடைபெற்ற குழியில் 75 சென்டிமீட்டர் ஆழத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கல்லாலான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இடைக்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடையேயான காலகட்டத்தில் 12 ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது […]
