புதுப்பேட்டையிலிருந்து ஆந்திராவுக்கு மினி லாரியில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகில் பண்டரக்கோட்டை பகுதியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் பண்டரக்கோட்டை பகுதிக்குச் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஒறையூர் ரோடு வழியாக வந்த ஒரு மினி லாரியை சந்தேகத்தின் பேரில் […]
