தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டாவது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. […]
