சி-டாட் உடன் டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இது ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கத்தால் நடத்தப்படும் BSNL தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். கன்வெர்ஜென்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் உபாத்யாய், இக்கூட்டமைப்பு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியுள்ளது. அதே […]
