டெல்லியில் 4½ வயதான குழந்தை தனது அப்பாவுடன் பைக்கில் செல்லும்போது கழுத்தில் மாஞ்சா நூல் அறுபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியின் சோனியா விஹாரை சேர்ந்த கிரிஷ்குமார் என்பவர் தனது 4½ வயதான குழந்தை இஷிகாவுடன் ஜமுனா பஜாரில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பைக்கின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை இஷிகாவின் கழுத்தை, எதிர்பாரத விதமாக காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று சட்டென்று அறுத்துள்ளது. இதையடுத்து பதறிப்போன கிரிஷ்குமார் கழுத்தில் அறுபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் குழந்தையை அருகில் […]
