மனித உரிமை மீறில், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் காங்கோ கிளர்ச்சிப் படை தலைவன் பாஸ்கோ நடகன்டா-வுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவின் தாது வளமிக்க இடாரு பகுதியைக் கைப்பற்ற பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் ஒன்றுக்கொன்று போரிட்டு வந்தன. அதில், யூனியன் ஆஃப் காங்கோலீஸ் பேட்ரியார்ஸ் (Union of Congolese Patriots- UCP) குறிப்பிடத்தக்கது. இந்த கிளர்ச்சி அமைப்பின் ராணுவ […]
