பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகில் இருக்கும் மாதவலாயம் பகுதியில் அப்துல் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செண்பகராமன்புதூர் அருகில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பண்ணை […]
