இலங்கையில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.3000 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தகைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி மதிப்பிலான பணத் தொகையை இலங்கை பெறுவதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை அமைச்சர் பந்துலா குணவர்தணை சென்ற ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கூறியிருந்தார். […]
