நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் […]
