தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனையில் சுமார் 29 லட்சம் 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி இதுவரையில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு வந்த 24 பேரிடம் […]
