கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கார் ஓட்டுநரான தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ரூபினி(58), சரஸ்வதி(50) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிதம்பரம்- விருதாச்சலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கூரை […]
