மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி காவல்துறையினர் ஆய்க்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அக்ரஹாரத்தில் பகுதியில் நீண்ட நேரமாக சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இடைக்காலப் பகுதியில் வசிக்கும் குமரேசன், இசக்கிசூர்யா மற்றும் மருதராஜ் என்பது […]
