டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் சாலர்புல் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3 வயது சிறுமியை மேற்கு வங்கத்தை சேர்ந்த அக்பர் அலி (65) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கு சூரஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். […]
