நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே மீண்டும் 3-வது தவணையாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 3-வது […]
