பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக […]
