அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]
