வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 3 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 6,600 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து […]
