திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் […]
